முன்விரோதத்தில் விபரீதம்..தலையை துண்டாக வெட்டிய கும்பல்..அம்பை அருகே கொலைவெறி செயல்

x

நெல்லை மாவட்டம் அம்பை அருகே, கட்டட தொழிலாளி சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 4 பேரை போலீசார் கைது செய்தனர். பிரம்மதேசம் பகுதியை சேர்ந்த முப்புடாதி என்பவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு, வாகை குளம் பகுதியில் தலை துண்டான நிலையில், படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்த போலீசார், அதே பகுதியை சேர்ந்த வேம்பு சுடலை, கார்த்திக் மற்றும் இசக்கியப்பன், சுடலையாண்டி ஆகிய 4 பேரை கைது செய்தனர். விசாரணையில், முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை சம்பவம் அரங்கேறியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்