சென்னை இளைஞர்களுக்கு ஆந்திரா 'கோனா' அருவியில் நேர்ந்த சோகம்

x

ஆந்திர மாநிலம் கோனா அருவியில் குளித்த போது மாயமான தமிழகத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்டனர்

ஆந்திர மாநிலம் நாகலாபுரம் அருகேயுள்ளே கோனா அருவிக்கு சென்ற சென்னையை சேர்ந்த 5 இளைஞர்கள் அங்கு தேங்கிய நீரில் குளித்துள்ளனர். அப்போது தண்ணீரில் குதித்த மூன்று பேர் நீண்ட நேரமாகியும் மேலே வராததால் மற்ற இருவருக்கும் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மீட்பு குழுவினருடன் சேர்ந்து தண்ணீரில் மூழ்கிய மாதவன், நவீன், கார்த்திக் பிரசாத் ஆகியோரை தேடும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் 3 பேர் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக புத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்