"கடைசி வரை இருந்தால் லட்டு,மிக்சர்." -அள்ளி சென்ற பொதுமக்கள்-கூட்டத்தில் மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்

x

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க வந்தவர்கள், மிக்சர் மற்றும் லட்டு பொட்டலங்களை போட்டிப்போட்டுக்கொண்டு எடுத்துச்சென்றனர்.பெரிய தள்ள பாடி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அப்போது இறுதி வரை அமர்ந்திருந்தால் தான் லட்டும், மிச்சரும் கிடைக்கும் என்று கூறியதாக தெரிகிறது. இதையறிந்த பொதுமக்கள் எங்கே தங்களுக்கு கிடைக்காமல் போய்விடுமோ என அஞ்சி, மிக்சர் மற்றும் லட்டு இருந்து பெட்டியை நோக்கி விரைந்து, போட்டிப்போட்டுக்கொண்டு எடுத்துச்சென்றனர். அப்போது மூதாட்டி ஒருவர் கீழே விழுந்ததை கூட கவனிக்காமல், ஆர்வம் முழுவதும் மிக்சர் மேலே இருந்தது.


Next Story

மேலும் செய்திகள்