Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (03-02-2023) | Morning Headlines | Thanthi TV

x

அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஈ.பி.எஸ் தாக்கல் செய்த முறையீடு குறித்து உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை...

ஓ.பி.எஸ் மற்றும் தேர்தல் ஆணையம் பதில் அளித்த நிலையில், இரட்டை இலை சின்னம் குறித்து இன்று விசாரணை நடைபெறுகிறது...

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதால், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்த தகவலை பதிவேற்றவில்லை....

உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்...

இரட்டை இலை சின்னம் தொடர்பாக, ஈ.பி.எஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்புகளில் இருந்து இதுவரை தேர்தல் ஆணையத்திடம் முறையிடவில்லை...

சின்னத்தை ஒதுக்குவதில், ஆணையத்தின் தற்போதைய பதிவேட்டில் உள்ள நிர்வாகிகளின் அடிப்படையிலேயே தேர்தல் அதிகாரி செயல்படுவார் எனவும் விளக்கம்...

அதிமுக பொதுக்குழு செல்லும் என உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் அளித்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை...

ஈபிஎஸ் தரப்பு விளக்கம்...

வேலூரில் இருந்து முதல்வர் ஸ்டாலின் பயணம் செய்த ரயிலை நிறுத்திய, வட இந்திய பெண்...

ராணிப்பேட்டை அருகே முகுந்தராயபுரம் பகுதியில், ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால் பரபரப்பு...


Next Story

மேலும் செய்திகள்