டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் முடிவுகள் வெளியீடு

x

குரூப் ஒன் முதல்நிலை தேர்வு முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்தாண்டு நவம்பர் மாதம் 92 காலி பணியிடங்களுக்கான குரூப் ஒன் முதல்நிலை தேர்வுகள் நடைபெற்றன. 3 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதிய இந்த தேர்வின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. டி.என்.பி.எஸ்.சி. இணையதள முகவரியில் தேர்வர்கள் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் ஒன் பிரதான தேர்வுகள் ஆகஸ்ட் மாதம் 10 முதல் 13ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், முதன்மைத் தேர்வுக்கு தேர்வு பெற்றவர்கள் 200 ரூபாய் கட்டணம் செலுத்தி, மே மாதம் 8 முதல் 16ஆம் தேதி வரை ஆவணங்கலை பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்