தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. | TN Rains | Heavy Rain

x

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், 1 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், பொதுமக்கள் அவதியடைந்தனர்.

திருநெல்வேலி மாநகரில் இடி மின்னலுடன் பெய்த கனமழையால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது

ஈரோடு மாவட்டம் பவானி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 3 மணி நேரத்துக்கு மேலாக வெளுத்து வாங்கிய கனமழையால், பிரதான சாலைகளின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், ஒரு மணி நேரம் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இந்த மழையினால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்