திருப்பூரில், மது போதையில் திரையரங்கினுள் ரகளை செய்த இளைஞர்கள்

x
  • திருப்பூரில், திரையரங்க ஊழியர்கள் மற்றும் படம் பார்க்கச் சென்ற இளைஞர்கள் இடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பு நிலவியது.
  • திருப்பூர், யூனியன் மில் சாலையில் மல்டிபிளக்ஸ் திரையரங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு, திரைப்படம் பார்க்க சென்ற இளைஞர்கள் சிலர் மது போதையில் இருந்ததாக தெரிகிறது.
  • இதனால், இளைஞர்களை படம் பார்க்க அனுமதிக்காமல், திரையரங்க ஊழியர்கள் தடுத்துள்ளனர்.
  • இதில் ஏற்பட்ட வாக்குவாதம் இரு தரப்பினரிடையே மோதலாக மாறியுள்ளது.
  • மேலும், திரையரங்க ஊழியர்கள், இளைஞர்களை தனியறைக்கு அழைத்துச் சென்று தாக்கியதாகக் கூறப்படும் நிலையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்