பைக் வாங்கி தராததால் ஆத்திரம்... தந்தையை 14 இடங்களில் குத்திய கொடூர மகன் - தாயின் கண்முன்னே நடந்த அதிர்ச்சி சம்பவம்

x
  • திருப்பத்தூர் அருகே, விலை உயர்ந்த இருசக்கர வாகனம் வாங்கித் தராததால், ஆத்திரமடைந்த மகன், கத்திரிக்கோலால் தந்தையை 14 இடங்களில் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.திருப்பத்துார் மாவட்டம் கசிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆதிமூலம் என்பவர், அதே பகுதியில் தையல் கடை நடத்தி வருகிறார்.
  • இவருக்கு சொந்தமாக சென்னையில் வீடு ஒன்று உள்ளது.
  • சென்னையில் உள்ள நிலத்தை விற்று பணமோ அல்லது விலை உயர்ந்த இருசக்கர வாகனமோ வாங்கித் தரச் சொல்லி, ஆதிமூலத்திடம், அவரது மகன் வெற்றிச்செல்வன் தகராறு செய்து வந்துள்ளார்.
  • இந்த நிலையில், ஆதிமூலம் நடத்தி வந்த தையல் கடைக்கு சென்ற வெற்றிச்செல்வன், மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
  • அப்போது ஆத்திரமடைந்த அவர், கடையில் இருந்த கத்திரிக்கோலை எடுத்து, தந்தை என்றும் பாராமல், 14 இடங்களில் குத்தியுள்ளார்.
  • படுகாயமடைந்த ஆதிமூலத்தை, அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்
  • . உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
  • இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், தலைமறைவாக இருந்த வெற்றிச்செல்வனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்