இலவசத்துக்காக உயிர்விட்ட 4 பெண்கள் - டிஎஸ்பி-க்கு மெமோ அனுப்பிய எஸ்பி

x

வாணியம்பாடியில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்த சம்பவத்தில் விளக்கம் கேட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மெமோ வழங்கியுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கடந்த 4 ஆம் தேதி தனியார் நிறுவனம் சார்பில் இலவச வேட்டி, சேலைகள் வழங்குவதற்கான டோக்கன் வழங்கப்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து அறிக்கை சமர்பித்து விளக்கம் அளிக்க வாணியம்பாடி டிஎஸ்பி மற்றும் நகர காவல் ஆய்வாளருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மெமோ அனுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்