திருப்பதியில் நள்ளிரவு 1.45 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு - பக்தி பரவசத்தில் பக்தர்கள்..!

x

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், நள்ளிரவு 1.45 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. முன்னதாக, மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, நள்ளிரவு 12 மணிக்கு சுப்ரபாத சேவை நடைபெற்றது.

இலவச தரிசன டிக்கெட் கவுண்டர்கள் திறக்கப்பட்ட ஒரே நாளில், நான்கு நாட்களுக்கான இரண்டு லட்சம் டிக்கெட்டுகள் வினியோகிக்கப்பட்ட நிலையில், சொர்க்க வாசல் வழியாக ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் பல்லாயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர்.

வைகுண்ட ஏகாதசியை ஒட்டி, கோயில் வளாகம் முழுவதும் மின் விளக்குகள் மற்றும் நான்கு டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்