டிராக்டரில் அறுந்து விழுந்த மின் கம்பி...6 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலி

x

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் தர்காஹொன்னூர் கிராமத்தில் வயல்வெளியில் சோளத்தண்டு அறுவடை செய்ய ஒன்பது பெண்கள் டிராக்டரில் சென்றுள்ளனர்.

அப்போது டிராக்டர் மீது உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது.

இதில் ஆறு பேர் உடல் கருகி உயிரிழந்த நிலையில், 3 பேர் தீவிர காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கூலி வேலைக்கு சென்ற ஒரே கிராமத்தை சேர்ந்த பெண்கள் மின்சார விபத்தில் சிக்கியது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்