சிறையிலிருந்த மாஜி MLA-வின் தம்பி மனைவியை கரெக்ட் செய்த ஆட்டோ டிரைவர் - கோயிலுக்கு முன் குத்தி பலி போட்ட பயங்கரம்

x

சிறையிலிருந்த மாஜி MLA-வின் தம்பி மனைவியை கரெக்ட் செய்த ஆட்டோ டிரைவர் - கோயிலுக்கு முன் குத்தி பலி போட்ட பயங்கரம்

திருச்சியில், சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு, சாமி கும்பிட கள்ளக்காதலியுடன் வந்த, ஆட்டோ டிரைவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மண்ணச்சநல்லூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சின்னராசு. இவருக்கும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பரமேஸ்வரியின் தம்பியான புல்லட் ராஜாவின் மனைவிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. கொலை வழக்கு தொடர்பாக சிறையில் இருந்த புல்லட் ராஜாவை பார்க்க அடிக்கடி ஆட்டோவில் சென்று வந்த போது, ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதற்கிடையே ஜாமினில் வெளிவந்த புல்லட் ராஜா, இதுகுறித்து கண்டித்துள்ளார். இருப்பினும் இருவரது பழக்கம் நீடித்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு இருவரும் சாமி கும்பிட வந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் சின்னராசுவை கத்தியால் கழுத்தில் குத்திவிட்டு தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவத்தில் சின்னராசு ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், புல்லட் ராஜா உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்