திருச்சி காவிரி கரையோரம்.. சிறுமிக்கு நடந்த பயங்கரம்.. லீக் ஆன அதிர்ச்சி வீடியோ.. அதிர்ந்து போன பெற்றோர்

x

திருச்சியில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தலைமறைவாகியிருந்த 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

முசிறி அடுத்த அந்தரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரெங்கநாதன்.

இவர் அப்பகுதியில் வசித்து வந்த 16 வயது சிறுமிக்கு செல்போன் மற்றும் சில பொருட்களை வாங்கி கொடுத்து நெருங்கி பழகியுள்ளார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு காவிரி ஆற்றின் அருகே ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சிறுமியை ரங்கநாதன் அழைத்து சென்றுள்ளார்.

அப்போது, தன் நண்பர்கள் 4 பேரையும் வரவழைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனை செல்போனில் படம்பிடித்த அவர்கள் சிறுமியை மிரட்டி அனுப்பியுள்ளனர்.

சிறுமியும் இந்த சம்பவத்தை யாரிடமும் சொல்லாத நிலையில், சிறுமியின் உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.. சிறுமிக்கு திருமணம் நடக்கும் தகவல் அறிந்த சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர்கள் சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அந்த 5 பேருக்குள் தகராறு ஏற்படவே, ஆத்திரத்தில் அவர்கள் வைத்திருந்த வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்டனர்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் அவர்கள் மீது போலீசில் புகாரளிக்கவே விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து, ரெங்கநாதன், மணிகண்டன், கணேஷ் ஆகிய 3 பேரை முதலில் போலீசார் கைது செய்தனர்.

இதில், தலைமறைவாகியிருந்த இருவரை போலீசார் தேடிவந்த நிலையில் தினேஷ் மற்றும் கபாலி ராஜா ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்