"நீங்க பேசிட்டு இருங்க அங்கிள், ஆண்டி... நான் இப்டிக்கா தாலிக்கட்டுறேன்..!". போலீஸ் முன் ThugLife செய்த கில்லாடி காதலன் காவல்நிலையத்தில் நடந்த கலாட்டா கல்யாணம்...

x

திருச்சியில் விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துவரப்பட்ட காதலன், காவல் நிலைய வாசலிலயே காதலிக்கு தாலி கட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருச்சி ஏர்போர்ட் பகுதியில் வசித்து வருபவர் அர்ஜீன். 23 வயதான இவர் 12 அம் வகுப்பு படித்து முடித்து விட்டு ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில், திருச்சி கேகே நகரை சேர்ந்த ஆசிரியர் பயிற்சி முடித்த சிவசங்கிரி என்ற மாணவியை அர்ஜீன் இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு இரு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு காவல்நிலையம் வரை சென்ற நிலையில், காதலர்களை விசாரணைக்காக போலீசார் அழைத்துள்ளனர். அப்போது, காவல்நிலைய வாசலில் காதலர்கள் நின்று கொண்டிருந்த நிலையில், திடீரென சிவசங்கரியின் கழுத்தில் அர்ஜீன் தாலி கட்டி திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைக்கண்டு இரு தரப்பினரும் அதிர்ச்சியடைந்த நிலையில், காதலர்கள் இருவரும் பாதுகாப்பிற்காக காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து, இரு தரப்பினரிடம் இருந்து எழுத்து வாயிலாக கடிதம் பெற்ற பின்பு, காதலர்களை போலீசார் அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்