மிரட்டும் பேய் மழை...அதிகரிக்கும் உயிர் பலி - அச்சத்தில் பிலிப்பைன்ஸ்

x

பிலிப்பைன்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் தினத்தன்று கொட்டித் தீர்த்த கனமழையால் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.

பிலிப்பைன்ஸ்-இன் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் கிறிஸ்துமஸ் தினத்தன்று கனமழை கொட்டித் தீர்த்தது... நகரங்களும் கிராமங்களும் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், ஏராளமான வீடுகள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன... 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பேய் மழையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்... இந்நிலையில், கனமழையால் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது... மேலும் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளை அந்நாட்டு அரசு தீவிரப்படுத்தியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்