"காங். தலைவர் சோனியா காந்திக்கு மிரட்டல்" - சபாநாயகருக்கு கடிதம் எழுதிய காங். எம்.பி.க்கள்

x

குடியரசு தலைவர் முர்மு பற்றி காங்கிரஸ் எம்பி கூறிய கருத்து தொடர்பான சர்ச்சையில் சோனியா காந்திக்கு பாஜகவினர் மிரட்டல் விடுத்ததாக, மக்களவை சபாநாயகருக்கு காங்கிரஸ் எம்பிக்கள் கடிதம் எழுதியுள்ளனர்.குடியரசுத் தலைவர் குறித்து, காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி கூறிய வார்த்தை குறித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து 23 காங்கிரஸ் எம்.பி.க்கள் சபாநாயகருக்கு எழுதிய கடிதத்தில்,சோனியா காந்தி, பாரதிய ஜனதா எம்.பி ரமாதேவி உடன் பேசி கொண்டிருந்தபோது, ஆண் மற்றும் பெண் எம்பிக்கள் மற்றும் அமைச்சர்கள் சோனியா காந்தியை சூழ்ந்து கொண்டு வார்த்தைகளால் தாக்கியதாகவும், உடல் ரீதியாகவும் அச்சுறுத்தியதாக குறிப்பிட்டுள்ளனர். பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்களின் ஒழுங்கீனமான நடவடிக்கை பற்றி, உரிமை மீறல் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள அவர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ள உறுப்பினர்களை அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்