"திமுக ஜெயிச்சதுக்கு இது தான் காரணம்..." - கே.பி.முனுசாமி பரபரப்பு பேட்டி

x

சட்டமன்றத் தேர்தலின்போது திமுக அறிவித்த உருப்படியான வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி குற்றம்சாட்டி உள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி முனுசாமி, கே.பி.அன்பழகன், பொன்னையன் உள்ளிட்டோர் பிரசாரம் மேற்கொண்டனர். பிரசாரத்தின்போது செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கே.பி.முனுசாமி, எதிர்க்கட்சியின் கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளிக்க வேண்டும் எனக் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்