"இதுதான் என் அடுத்த பிளான்..." - விஸ்வநாதன் ஆனந்த் ஓபன் டாக் | Chess Olympiad 2022

x

44வது செஸ் ஒலிம்பியாட் தொடர் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளதாக சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவர் தெரிவித்துள்ளார்.

மாமல்லபரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய, சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவர் ஆர்கெடி வோர்க்கோவிச்(Arkady Dvorkovich), நான்கு மாதத்தில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்த தமிழக அரசுக்கும், இந்திய அரசுக்கும் நன்றி தெரிவித்தார்.

இதுவரை நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியிலே இதுதான் சிறந்தது என குறிப்பிட்ட அவர், அடுத்த செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி நாட்டில் நடைபெறும் என்றும் அறிவித்தார்.

தொடர்ந்து பேசிய சர்வதேச செஸ் கூட்டமைப்பு துணைத்தலைவர் விஸ்வநாதன் ஆனந்த், செஸ் விளையாட்டில் இந்தியாவிற்கு தேவையான உதவிகளை வழங்குவேன் என்றும், இந்தியாவில் செஸ் விளையாட்டிற்கு இது பொன்னான நேரம் என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்