தடுத்து நிறுத்திய டிஎஸ்பி.. ஒப்பாரி வைத்த பெண்கள் - சாலையில் திடீர் பரபரப்பு

x
  • திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் இடிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்றாக 30 நாட்களுக்குள் மாற்று இடம் வழங்கப்படும் என பச்சை மையில் கையெழுத்திட்டு வருவாய் கோட்டாட்சியர் உறுதிமொழி கடிதத்தை வழங்கியுள்ளார்.
  • திருவண்ணாமலை மாவட்டம், பட்டியந்தல் கிராமத்தில் 6 மாதத்திற்கு முன்பு இடிக்கப்பட்ட 43 வீடுகளுக்கு மாற்று இடம் கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கிராம மக்கள் நடைப்பயணம் மேற்கொண்டனர்.
  • அப்போது டிஎஸ்பி தலைமையிலான போலீசார் தடுத்ததால் ஒப்பாரி வைத்து கிராம பெண்கள் அழுதனர்.
  • தகவலறிந்த ஆரணி வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி நேரில் வந்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
  • ஆனால் கிராம மக்கள், இடிக்கப்பட்ட வீடுகளுக்கு பதில் மாற்று இடம் வழங்குவது குறித்து உறுதி பத்திரம் எழுதி கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
  • இதனையடுத்து, வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி பச்சை மையினால் 30 நாட்களுள் வீட்டு மனை கிடைக்க வழி செய்வதாக எழுத்துப்பூர்வமாக கையெழுத்திட்டு அதனை பொதுமக்களிடம் வழங்கினார்.
  • பின்னர் கிராம பொதுமக்கள் சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகு கலைந்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்