புட புட கையில் வரும் சாலை..தி.மலையில் பரபரப்பு

x

திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள ஐந்தாவது வார்டில், சுமார் 3 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சிமெண்ட் சாலை, கைகளாலேயே பெயர்தெடுக்கப்படும் நிலையில் தரமற்ற முறையில் அமைக்கப்படுவதாகவும், இத்தகைய சிமெண்ட் சாலைகள் தங்களுக்கு வேண்டாம் எனவும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இது போன்ற தரமற்ற சிமெண்ட் சாலைகள் அமைப்பதை விட தார்சாலையே போதும் எனவும் வருத்தத்துடன் தங்களது வேதனையை தெரிவித்தனர்...


Next Story

மேலும் செய்திகள்