ஆசை காட்டி மோசடி.. பல கோடி ரூபாயுடன் எஸ்கேப் - சீட்டு கம்பெனி முன் மக்கள் கண்ணீர்

x
  • திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே தீபாவளி சீட்டு நடத்தி பல கோடி ரூபாய் பணம் வசூலித்து நகையை கொடுக்காமல் இழுத்தடித்த சீட்டு கம்பெனியை பொது மக்கள் முற்றுகையிட்டனர்.
  • திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே ஸ்டார் ஏஜென்சி என்ற பெயரில் தீபாவளி, பொங்கல் சீட்டு நடத்தி வந்துள்ளனர். மாதம் 500, 1000 ரூபாய் என 12 மாத தீபாவளி சீட்டு பணம் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
  • ஆனால் தீபாவளி பண்டிகை முடிந்தும், நகையை கொடுக்காமல் இழுத்தடித்து, அதன் உரிமையாளர் தலைமறைவானதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள், சீட்டு கம்பெனியை முற்றுகையிட்டு, செங்குன்றம் - திருவள்ளூர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  • தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட மக்களை அப்புறப்படுத்தினர். இந்த சீட்டு கம்பெனி நடத்திய உரிமையாளர் யார்? எவ்வளவு வாடிக்கையாளர்களிடம் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து சோழவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்