சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கானா பாடகர்

x
  • சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் பேரில் கானா பாடகர் கைது செய்யப்பட்டார்.
  • திருமுல்லைவாயல், சிவசக்தி நகரில் பாலியல் தொழில் நடப்பதாக வந்த புகாரின் பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
  • சோதனையின் போது அப்பகுதியில் பாலியல் தொழில் நடத்தி வந்த சங்கீதா என்பவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து ஒரு பெண் மற்றும் சிறுமியை மீட்டு பெண்ணை காப்பகத்திற்கும், சிறுமியை அவரது தந்தையுடனும் அனுப்பி வைத்தனர்.
  • சங்கீதா கைது செய்யப்பட்ட நிலையில், அவரது வாய்தாவுக்காக நீதிமன்றம் அழைத்து வரப்பட்டார்.
  • அப்போது, நடேசன் என்ற கானா பாடகர், சங்கீதாவுக்கு ஆதரவாக சாட்சி கூற சிறுமியை அழைத்து வந்திருந்தார்.
  • சிறுமியிடம் விசாரித்ததில், அவர் சிறுமியை பொய் சாட்சி கூற அழைத்து வந்ததும் மேலும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, சிறுமியை காப்பகத்திற்கு அனுப்பிய போலீசார், கானா பாடகர் நடேசனை கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்