"நம்ம ஆட்சியிலேயே இந்த கேவலமான நிலையா?"தரமற்ற சிமெண்ட் சாலை...! தடுத்து நிறுத்தி ஆவேசமாக கேட்ட திமுக கவுன்சிலர்

x

திருப்பத்தூர் நகராட்சியில் தரமற்ற சாலை அமைக்கப்படுவதாக சாலை பணியை தடுத்து நிறுத்திய திமுக கவுன்சிலர்கள், நகராட்சி பொறியாளரின் செயல்பாட்டால் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

திருப்பத்தூர் நகராட்சியில் சிமெண்ட் தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் 9வது வார்டு பகுதியில் சாலை தரமற்று அமைக்கப்படுவதாக கூறி, பணிகளை திமுக கவுன்சிலர்கள் தடுத்து நிறுத்தினர்.

இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் நகராட்சி பொறியாளர் உமா மகேஸ்வரியும், பணி மேற்பார்வையாளர் கார்த்திகேயனும் நேரில் வந்தனர்.

அப்போது கார்த்திகேயனிடம் தரமற்ற சாலை போடப்படுவது குறித்து திமுக கவுன்சிலர்கள் ஆவேசமாக கேள்வியெழுப்பினர்.

உமா மகேஸ்வரி காரில் இறந்து இறங்கி வராததால் ஆத்திரமடைந்த அவர்கள், நமது ஆட்சியிலேயே நமக்கு இந்த கேவலமான நிலை வர வேண்டுமா என வேதனைப்பட்டனர்.

நகராட்சியில் அராஜகம் நடப்பதாகவும் ஆவேசமாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்