ஏழு மலைகள் ஏறி அட்டகாசம் செய்த மாண்டஸ்.. திணறிய திருப்பதி... திடீர் வெள்ளப்பெருக்கால் பக்தர்கள் அவதி

x

மாண்டஸ் புயல் காரணமாக விடிய விடிய பெய்த கனமழையில், திருமலை முழுவதும் பனிமூட்டத்துடன் ரம்யமாக காட்சி அளித்து வருகிறது. திருப்பதி மாவட்டத்தில் நேற்று மதியம் தொடங்கிய மழை, விடிய விடிய வெளுக்கு வாங்கியது. இதனால் திருப்பதி மலைக்கு தரிசனத்திற்கு வந்திருந்த பக்தர்கள், பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. தொடர் அடை மழை காரணமாக திருப்பதியில் உள்ள தாழ்வான பகுதிகளில் இருக்கும் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் அங்கு வசிக்கும் பொது மக்களை தற்காலிக முகாம்களுக்கு அனுப்பி வைக்கும் பணியில் திருப்பதி நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். திருப்பதி மலையில் உள்ள பாபநாசம், ஸ்ரீவாரி பாதம் போன்ற இடங்களுக்கு பனிமூட்டம் காரணமாக வாகனங்கள், முகப்பு விளக்கை எரியவிட்டு செல்கின்றனர். திருமலை முழுவதும் பனிமூட்டத்துடன் ரம்யமாக காட்சி அளித்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்