காலனியில் டூவீலரை திருட முயன்ற திருடர்கள்; சுதாரித்த பாதுகாவலர் வேகமாய் செய்த செயல்

x

டெல்லியில் உள்ள குடியிருப்பு பகுதியில் இருசக்கர வாகனத்தை திருட முயற்சித்த 2 பேர், பாதுகாவலரின் சாதுரியத்தால் மாட்டிக்கொண்டனர்.

கால்காஜி பகுதியில் உள்ள எவரெஸ்ட் குடியிருப்பு பகுதியில் ஆய்வுக்கு வந்திருப்பதாக கூறி, மாநகராட்சி அதிகாரிகள் போல் நடித்து புகுந்த இரண்டு திருடர்கள், அங்கிருந்த ஒரு இருசக்கர வாகனத்தை திருடிவிட்டு தப்பியோட முயன்றனர்.

இவர்கள் மீது சந்தேகம் அடைந்த பாதுகாவலர், உடனடியாக காலனியின் கதவை இழுத்து மூடியதால் இருசக்கர வாகனத்தில் தப்பியோட முயன்ற திருடர்கள், கேட்டின் மீது மோதி கீழே விழுந்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் திருடர்களை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்