நடந்து சென்ற ஆசிரியரிடம் செயினை பறித்த கொள்ளையன்... பிடித்து எலும்பை எண்ணிய ஊர்மக்கள் - பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியிடு

x

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், சாலையில் நடந்து சென்ற ஆசிரியையிடம் தங்கச்செயினை பறித்து தப்ப முயன்ற நபரை, பொதுமக்கள் மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்தனர். சங்கரன்கோவில் தபசு நகரை சேர்ந்த முத்துலட்சுமி, கோயிலுக்கு சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்த சிவகாசியை சேர்ந்த பொன்ராஜ் என்பவர், முத்துலட்சுமி அணிந்திருந்த 5 சவரன் தங்கச்செயினை பறித்துக்கொண்டு கீழே தள்ளிவிட்டு ஓடினார். இதையடுத்து முத்துலட்சுமி கூச்சலிடவே, அக்கம்பக்கத்தினர் திரண்டு, பொன்ராஜை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவத்தின் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்