தியாகராஜர் ஆராதனை விழாவை தமிழிசை சௌந்தரராஜன், ஜி.கே.வாசன் தொடங்கி வைத்தனர்

x

தஞ்சை மாவட்டம், திருவையாறில், சத்குரு தியாகராஜரின் 176-ஆவது ஆராதனை விழாவை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் தியாக பிரம்மா சபை தலைவருமான ஜி.கே. வாசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். சத்குரு தியாகராஜரின் 176-ஆவது ஆராதனை விழா, வரும் 11-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சரத்ன கீர்த்தனை, வரும் 11 தேதி காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில், நாடு முழுவதும் இருந்து வரும் இசைக்கலைஞர்கள் இசை அஞ்சலி செலுத்த உள்ளனர். அதில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்