வெளக்கமாத்தால வெளுத்தெடுக்கும் வினோத திருவிழா...ஒன்று கூடி அடித்து கொள்ளும் உறவுகள் - சொல்ற விளக்கம் இதுல ஹைலைட்..!

x

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கோயில் திருவிழாவில் துடைப்பத்தால் ஒருவரை ஒருவர் அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மறவபட்டி கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா நடைபெற்றது. அப்போது, கிராம மக்கள் தங்களது உறவினர்களை கயிறால் கட்டிக்கொண்டு, துடைப்பத்தால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். கழிவுநீர், சேறும் சகதியுமான நீரில் துடைப்பத்தை நனைத்து அடித்தனர். மேலும், அடி வாங்கியவர்கள், சேற்றில் படுத்து அடி வாங்கினர். நீண்ட நாள் பிரிந்து வாழும் உறவுகளுக்கு இடையே மீண்டும் உறவு வளரும் என நம்பிக்கையாக உள்ளது என அப்பகுதி மக்கள் கூறினர்.


Next Story

மேலும் செய்திகள்