4 வயது சிறுமியை காவு வாங்கிய கழிவு நீர் தொட்டி - மகளை இழந்த வடமாநில பெண் பரிதவிப்பு

x

கேரள மாநிலம் கொச்சியில், கழிவு நீர் குழியில் விழுந்து 4 வயது சிறுமி உயிரிந்த சம்பவம், குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொச்சி பெரும்பாவூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பிளைவுட் நிறுவனத்தில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஹுனுபா என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார்.

இவர் தனது 4 வயது மகள் அஸ்மினியை வேலை செய்யும் இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீர் பாதை, சிமெண்ட் சிலாப் வைத்து மூடப்பட்டுள்ளது. இந்த பகுதிக்கு வந்த சிறுமி, இரு சிலாப்புகளுக்கு இடையே இருந்த இடைவெளி வழியாக விழுந்துள்ளார்.

உடனடியாக அங்கிருந்தவர்கள் குழந்தையை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், சிகிச்சைப் பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்