தனியார் பேருந்து மோதி கல்லூரி மாணவன் பலி... நிற்காமல் சென்ற பேருந்து.. - விரட்டி பிடித்த போலீஸ்... தேனி அருகே அதிர்ச்சி சம்பவம்

x
  • தேனி அருகே தனியார் பேருந்து மோதியதில் கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது...

  • தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சாலையில் கோடாங்கிபட்டியில் இருந்து போடி அரசு பொறியல் கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் கல்லூரி மாணவர்களான லோகேஷ்வரன் மற்றும் காட்டுத்துரை ஆகிய 2 பேர் சென்றனர்.
  • அப்போது அந்த வழியாக வந்த தனியார் பேருந்து மாணவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
  • இதில் சாலையில் விழுந்த மாணவன் லோகேஷ்வரன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
  • படுகாயமடைந்த காட்டுத்துரை பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
  • மோதி விட்டு நிற்காமல் சென்ற தனியார் பேருந்தை போலீசார் விரட்டிச் சென்று பிடித்து ஓட்டுநரை கைது செய்தனர்.
  • இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்