அதிக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் - தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

அதிக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் - தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பண்டிகை காலங்களில் திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக, பெரம்பூரைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த வருவாய் நிர்வாகத்துறை ஆணையர், கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்குகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பல்வேறு திரையரங்குகளில் சோதனை நடத்தி, அபராதம் விதித்துள்ளதாகவும், பட்டியலை தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த நீதிபதி, கூடுதல் கட்டணம் தொடர்பாக ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகள் தொடரும் என்றும், அரசின் கண்காணிப்பு தொடர வேண்டுமெனவும் கூறி, வழக்கை முடித்து வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்