"மத்தவங்களுக்கு நல்லது நினைச்சா இப்படித்தான் ஆகும் போல.." தாம்பரத்தில் முதியவரை தாக்கிய இளைஞர்கள்

x

தாம்பரம் அருகே, தாக்குதல் நடத்திய இளைஞர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என, முதியவர் குற்றஞ்சாட்டியுள்ளார். சேலையூரைச் சேர்ந்த தனஜெயன் என்பவர், பதவஞ்சேரி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, மதுபோதையில் அதிவேகமாக வந்த இளைஞர்களிடம் மெதுவாக வருமாறு கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர், தனஜெயன் வைத்திருந்த பானையை எடுத்து, அவரது தலையில் பலமாக தாக்கினார். பின்னர், அவரது இருசக்கர வாகனத்தின் சாவியை எடுத்துக் கொண்டு இளைஞர்கள் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளுடன் சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என, தனஜெயன் குற்றஞ்சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்