அமீரகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட இளைஞர்.. மருத்துவமணையில் இருந்து திடீர் மாயம் - பரபரப்பு சம்பவம்

x

கேரளாவில் குரங்கம்மை சந்தேகத்தின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர், மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குற்ற வழக்கு காரணமாக அமீரகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட உத்திரபிரதேசத்தை சேர்ந்த இளைஞர் சில நாட்களுக்கு முன்பு விமானம் மூலம் கொச்சி வந்தார்.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குரங்கம்மை அறிகுறிகள் காணப்பட்டன.

உடனடியாக ஆலுவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன.

இந்நிலையில், ஆலப்புழா வைராலஜி ஆய்வகத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் சாதாரண அம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மருத்துவமனையிலில் இருந்து அந்த இளைஞர் மாயமாகி உள்ளார்.

இதையடுத்து மாயமான இளைஞரை ஆலுவா போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்