சூர்யாவிற்கு பேனர் கட்டிய இளைஞர்கள்...மின்சாரம் தாக்கி துடி துடித்து பலி..கண்ணீருடன் கதறிய குடும்பம்

x

நடிகர் சூர்யாவின் 48வது பிறந்தநாள், கடந்த 23ம் தேதி கொண்டாடப்பட்டது. சூர்யாவின் பிறந்தநாளை ரசிகர்கள் ஆரவாரமாக கொண்டாடிய நிலையில், ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக அவரது நடிப்பில் உருவாகி வரும் கங்குவா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவையும் அதே நாளில் படக்குழு வெளியிட்டது.

இந்த நிலையில், ஆந்திராவில் சூர்யா பிறந்தநாளை கொண்டாடிய இரு ரசிகர்கள் எதிர்பாராத விதமாக உயிரிழந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. நரசராவ்பேட்டையில் வெங்கடேஷ் மற்றும் போளூரி சாய் ஆகிய இருவர், சூர்யாவின் பிறந்தநாள் வாழ்த்து பேனரை கட்டிக் கொண்டிருந்தபோது, பிளக்ஸ் பேனரில் உள்ள இரும்பு கம்பியில், மின்கம்பி உரசியதில் இருவருமே மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ரசிகர்கள் இருவர் உயிரிழந்த சம்பவத்தை அறிந்து மனம் உடைந்துபோன நடிகர் சூர்யா, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் வீடியோ கால் மூலம் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், தன்னை குடும்பத்தில் ஒருவனாக நினைத்துக் கொள்ளுமாறும், வேண்டிய உதவிகளை செய்து தருவதாகவும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்