பெண் போலீசின் கையை பிடித்து வரம்பு மீறிய இளைஞர்..பின்னர் நடந்த சோக சம்பவம்

x

விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணம நாயக்கன்பட்டியில் நடந்த கோவில் திருவிழாவில், பாதுகாப்பு பணிக்காக போலீசார் சென்றுள்ளனர். அப்போது கதிரேசன் என்ற நபர், மதுபோதையில் சிறுவன் ஒருவனை, பெண் காவல் சார்பு ஆய்வாளர் செல்வி மீது தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, பெண் சார்பு ஆய்வாளரின் முகத்தில் தாக்கி, வலது கையை பிடித்து திருகியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பெண் சார்பு ஆய்வாளர் எம்.புதுப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், கதிரேசனை போலீசார் கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்