நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த இளைஞர்..செல்ஃபி மோகத்தால் நிகழ்ந்த சோகம்..! - மன்றாடிய இளைஞர்

x

செல்ஃபி எடுக்கும் போது எதிர்பாராத விதமாக நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் உள்ள அஜந்தா குகைகளுக்கு அருகில் உள்ள நீர்வீழ்ச்சியில் 30 வயது இளைஞர் கோபால் சவான் செல்ஃபி எடுக்கும் போது தவறி விழுந்தார். கோபாலுக்கு நீச்சல் தெரிந்ததால் அவரால் கரையைக் கடக்க முடிந்துள்ளது... ஒரு கல்லைப் பிடித்துக் கொண்டு காப்பாற்றுமாறு அவர் மன்றாடிய நிலையில், கோபாலின் நண்பர்கள் உடனடியாக காவல் துறைக்குத் தகவல் கொடுத்தனர். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு கோபால் பத்திரமாக மீட்கப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்