காதலனுடன் மது அருந்திய இளம்பெண் - கடைசியில் நடந்த விபரீதம் | Chennai | Love Issue

x

சென்னை கண்ணகி நகரில், காதலனுடன் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறின் போது, 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணிற்கு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கண்ணகி நகர் சுனாமி குடியிருப்பு பகுதியில் உள்ள தோழியின் வீட்டில், சோனாலி என்ற இளம்பெண் தனது காதலனுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். போதை தலைக்கேறியதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, திடீரென 4வது மாடியில் இருந்து சோனாலி கீழே குதித்து, தற்கொலைக்கு முயன்றுள்ளார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலம் சோனாலி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதில், சோனாலிக்கு 2 கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதை அடுத்து, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, தற்கொலைக்கு முயன்ற சோனாலி மற்றும் அவரது தோழிகள் 5 பேர் மதுபோதையில், கடந்த 17ம் தேதி நள்ளிரவு, திருவல்லிக்கேணியில், சாலையில் சென்ற வாகனங்களை வழிமறித்து அடாவடியில் ஈடுபட்டது குறிப்பிட்டதக்கது.


Next Story

மேலும் செய்திகள்