கணவன் இறந்த செய்தி கேட்ட மறுநொடி உயிரை விட்ட மனைவி.. சோகத்தில் மூழ்கிய கிராம்

x

புதுக்கோட்டை மாவட்டம், தெற்கு துவரவயல் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி திருநாவுக்கரசு-வினிதா.

கடந்த சனிக்கிழமை, திருநாவுக்கரசு கிரிக்கெட் விளையாடி விட்டு வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து அவரது மனைவி, வினிதா தனது கணவனை கண்டித்ததாகத் தெரிகிறது.

இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதில் திருநாவுக்கரசு தூக்கிட்டுக் கொண்டார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, உடற்கூராய்விற்கு பின்னர், அவரது உடல் வீட்டிற்கு எடுத்து வரப்பட்டது. இதையறிந்த அவரது மனைவி வினிதா, கதறி அழுதபடி மயங்கி விழுந்தார்.

அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிந்ததாக தெரிவித்தனர்.

இச்சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்