மது அருந்திய​தை தட்டிக் கேட்ட மனைவி... போதையில் கொன்று விட்டு... மீண்டும் உறங்கச் சென்ற கணவன்

x

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த நந்தகுமார் - பபிதா தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன. புத்தாண்டு அன்று, மனைவி பபிதாவை அவரது தகப்பனார் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு, வீட்டில் நண்பர்களுடன் நந்தகுமார் மது அருந்தியுள்ளார். அடுத்தநாள் காலை, கணவரின் வீட்டிற்கு வந்த பபிதா, வீட்டில் மதுபாட்டில்கள் இருப்பதைக் கண்டு ஆத்திரம் அடைந்துள்ளார். இதுதொடர்பாக கணவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த நந்தகுமார், பபிதாவை துணியால் கழுத்தை நெரித்து தள்ளிவிட்டு, மதுபோதையில் மீண்டும் உறங்கச் சென்றுள்ளார். மூச்சற்ற நிலையில் பபிதா இருந்ததால், அச்சமடைந்த குழந்தைகள் இருவரும் தந்தையிடம் கூறியுள்ளனர். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவர், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரியவந்தது. கழுத்தை நெரிக்கப்பட்டதற்கான அடையாளம் இருந்ததால், முதலில் தற்கொலை வழக்காக போலீசார் பதிவு செய்தனர். பின்னர், விசாரணை நடத்தியதில், கணவர் கழுத்தை நெரித்துக் கொன்றது அம்பலமானது. அதனைத் தொடர்ந்து நந்தகுமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்