காத்திருந்து கருவருத்த கும்பல்.. அடித்ததற்காக உயிரை கொன்ற இளைஞர்கள்.. | Madurai

x

மதுரையில் 21 வயது இளைஞர் ஒருவர் வீடு புகுந்து வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை கரிசல்குளத்தில் 21 வயது இளைஞரான பூமிநாதன் என்பவர் வீடு புகுந்து வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விசாரணையில், சில மாதங்களுக்கு முன்பு, பூமிநாதன் அவரின் நண்பணுடன் சேர்ந்து ஜீவா என்பவரை தாக்கியதாகவும், அதற்கு பழிதீர்க்கும் விதமாக ஜீவாவின் கூட்டாளிகள் பூமிநாதனை கொலை செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், ஜீவா உட்பட அவரின் கூட்டாளிகள் 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்