பரிதாபப்பட்டு பைக்கில் லிப்ட் கொடுத்த நபருக்கு நேர்ந்த உச்சக்கட்ட விபரீதம்.. லிப்ட் கொடுப்பவர்களே உஷார்..!

x

திருப்பூர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரிடம் லிப்ட் கேட்டு அழைத்துச் சென்று, அவருடைய வாகனம், செல்போன், பணம் ஆகியவற்றை வழிப்பறி செய்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் தென்னம்பாளையத்தில் தங்கியிருக்கும் பெர்னான்டஸ் என்பவர், வியாழக்கிழமை இரவு, பல்லடத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் திருப்பூருக்கு சென்று கொண்டிருந்தார். அருள்புரம் அருகே அவரிடம் லிப்ட் கேட்ட ஒருவர், தனது இருசக்கர வாகனம் பெட்ரோல் தீர்ந்து நடுவழியில் நின்று விட்டதால், அந்த இடத்தில் தன்னை இறக்கிவிடுமாறு கேட்டுள்ளார். அவரைப் பார்த்து பரிதாபம் அடைந்த பெர்னான்டஸ், தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு அவர் கூறிய இடத்திற்கு சென்றார். பாச்சாங்காட்டுபாளையம் சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி வழியாக சென்றபோது, அங்கு மறைந்திருந்த 3 பேர் தடுத்து நிறுத்தி தாக்கி, இருசக்கர வாகனம், 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன், ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு விரட்டியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பி வந்த பெர்னாண்டஸ் அளித்த புகாரின்பேரில், பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி, சிவக்குமார், சந்தோஷ் குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர். வழிப்பறியில் தொடர்புடைய மேலும் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்