திடீரென தீப்பிடித்து எரிந்த டிரான்ஸ்பார்மர்.. விரைந்து வந்து அணைத்த மின் ஊழியர்கள் - டிரான்ஸ்பார்மர் எரிந்தது எப்படி?

x

ராமநாதபுரத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த டிரான்ஸ்பார்மரால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில், சிகில் ராஜ வீதியில் உள்ள டிரான்ஸ்பார்மர் மளமளவென தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக விரைந்து செயல்பட்ட அப்பகுதி மக்கள் மணலை வீசி தீயை அணைத்தனர். பின்னர், தகவலறிந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். முதற்கட்ட விசாரணையில், முதற்கட்ட விசாரணையில் கடுமையான வெயிலின் தாக்கத்தால் விபத்து நேர்ந்ததாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்