கணவருடன் விவாகரத்து ஆன பெண் வீட்டில் அழுகிய நிலையில் இறந்து கிடந்த சோகம் ...புதுக்கோட்டையில் அதிர்ச்சி

x

ஆலங்குடி அருகே 55 வயது மதிக்கதக்க பெண்மணி, உடல் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியை சேர்ந்த லலிதா என்பவர், கணவரோடு விவாகரத்து ஆன நிலையில் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அவர் அவரது வீட்டிலேயே, இரத்த வெள்ளத்தில் உடல் லேசாக அழுக தொடங்கிய நிலையில், சடலமாக கிடந்துள்ளார். இந்த சம்பவத்தை சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்