பொதுமக்களை அச்சுறுத்தி வந்த புலி சடலமாக மீட்பு

x

கேரள மாநிலம் கட்டப்பனை பகுதியில் கடந்த சில நாட்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த புலி, அங்குள்ள குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டது.

இடுக்கி மாவட்டத்திற்கு உட்பட்ட கட்டப்பனை பகுதியில் கடந்த சில நாட்களாக அங்குள்ள மக்களின் வளர்ப்பு பிராணிகளை புலி கொன்று கொண்டிருந்தது.

இதனால் பொதுமக்கள் அச்சமடைந்த நிலையில், குழந்தைகளை கூட தனியாக வீட்டிற்கு வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.

புலியால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்து இருந்த நிலையில், அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் உள்ள குளத்தில் புலி சடலமாக மீட்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்