மக்களை அலறவிட்ட புலி...உயிரியல் பூங்காவில் உயிரிழப்பு - கொடூர நோயால் நடந்த விபரீதம்

x

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த புலி புற்று நோய் பாதிப்பால் உயிரிழந்தது. 2009ம் ஆண்டு மக்களை அச்சுறுத்திய கிஷான் என்ற புலி, நவாப் வாஜித் அலி ஷா உயிரியல் பூங்காவிற்கு எடுத்து வரப்பட்டது. காது மற்றும் வாய் பகுதியில் ஏற்பட்ட புற்றுநோய் தாக்கத்தால் வேட்டையாடுவதை நிறுத்தி கொண்ட புலியை உயிரியல் பூங்கா நிர்வாகம் பராமரித்து வந்தது. இந்த நிலையில் நோய் தீவிரத்தால் உணவு எடுத்து கொள்வதை நிறுத்திய புலி உயிரிழந்ததாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்