விவசாயியை அடித்து கொன்ற புலி...அச்சத்தில் ஆழ்ந்த கிராம மக்கள்

x

தெலுங்கானா மாநிலம் ஆசிபாபாத் பகுதியில் புலி ஒன்று விவசாயியை வேட்டையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கிடி கிராமத்தை சேர்ந்த விவசாயி சித்தாம் என்பவரை புலி ஒன்று அடித்து கொன்றது. புலிகளின் நடமாட்டம் அதிகரிப்பதால் அதனை தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மஞ்சரியாலா, மேட்ச்சல் ஆகிய மாவட்டங்களில் புலிகளின் நடமாட்டத்தை பார்த்த சிலர், அவற்றை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்