"3 கோடி அப்பு..." - புதிய தார் சாலையை கையில் பெயர்த்து எடுத்த வாலிபர் ... உ.பி-யில் பரபரப்பு

x

உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் தார் சாலையை கைகளால் பெயர்த்தெடுத்த காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. பிலிபிட் மாவட்டத்தின் புரான்பூர் மற்றும் பக்வந்தபூர் கிராமம் இடையே 3 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் தார் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. புதிதாக அமைக்கப்பட்ட இந்த சாலையின் தரம் மிகவும் மோசமாக காணப்பட்டுள்ளது. இந்நிலையில், இளைஞர் ஒருவர் சாலையை கையால் பெயர்த்தெடுத்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்