"கடையில் வாங்கிய புளி சரியில்லை"... வியாபாரியை கொடூரமாக தாக்கிய வி.ஏ.ஓ. குண்டர்கள் - வெளியான அதிர்ச்சி காட்சிகள்

x

திருச்சியில் வியாபாரி மீது வி.ஏ.ஓ மற்றும் குண்டர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்திய சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன. திருச்சி கல்பாளையத்தில் வசித்து வரும் வி.ஏ.ஓ கலைவாணி, கடந்த 10 நாட்களுக்கு முன்பு காந்தி மார்க்கெட்டில் புளி வாங்கிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்தப் புளி சரியில்லை என வியாபாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், 30க்கும் மேற்பட்ட குண்டர்களை வரவ​ழைத்து, கடையில் இருந்த இப்ராஹிம் என்பவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன், கடை அடித்து நொறுக்கப்பட்டது. வியாபாரிகளை அச்சுறுத்தும் அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்