சென்னையில் ATM-ஐ உடைத்து ஹைதராபாத்தை அலறவிட்ட Swiggy ஊழியர்.. வாக்குமூலம் கேட்டு அதிர்ந்த போலீஸ்

x

சென்னை கே.கே. நகரில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மர்ம நபர் ஒருவர் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளார். இதனால், ஹைதராபாத்தில் உள்ள வங்கி தலைமையகத்தில் அபாய ஒலி எழுந்த நிலையில், நிர்வாகிகள் போலீசில் புகாரளித்தனர். இதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு சிசிடிவியை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், நெசப்பாக்கத்தை சேர்ந்த ஸ்விகி ஊழியர் அசோக் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதில், அசோக் மீது ஏற்கெனவே 2 வழக்குகள் நிலுவையில் இருப்பதும், சம்பவத்தன்று மது அருந்த பணமில்லாததால் ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயன்றதும் தெரியவர, அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்