மன உளைச்சலில் இருந்த தாயை 56 ஆயிரம் கி.மீ ஆன்மீக சுற்றுலா அழைத்து சென்ற மகன்! - நெகிழ்ச்சி சம்பவம்

x

தந்தையை இழந்து மன உளைச்சலில் இருந்த தாயை, இருசக்கர வாகனத்தில் சுமார் 56 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் கடந்து ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்லும் மகனின் பாசம், அனைவரது கவனத்தையும் கவர்ந்தது.

கர்நாடகாவை சேர்ந்த 45வயதான கிருஷ்ணகுமாரின் தந்தை இறந்ததால், தாய் ரத்னம்மாள் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

அதை அறிந்த கிருஷ்ணகுமார், தாயின் மன உளைச்சலை போக்க அவரை ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்ல முடிவெடுத்தார்.

அதன்படி, 2018ம் ஆண்டு முதல் இதுவரை 56 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு இருசக்கர வாகனத்தில் தாயுடன் ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளார்.

திருப்பதி, காளஹஸ்தி, ஸ்ரீரங்கம், தஞ்ச, திருச்சி என கோயில் உள்ள பகுதிகளுக்கு தாய், மகனின் ஆன்மீக சுற்றுலா தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் தூத்துக்குடியின் கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லி அம்மன் உடனுறை பூ வண்ண நாத கோவிலுக்கு சென்ற இருவரும், சாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்